உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம்

No comments

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2
நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

1.மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக்கொள்வீர் -- 2
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்
அணுகாமல் காப்பாற்றுவீர் -- 2

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

2.என் பெலன் நீர்தானே
கேடகமும் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன்

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

3.கானானிய பெண் ஒருத்தி
கத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள்
அம்மா உன் விசுவாசம் பெரியது என்று
பாராட்டி புதுமை செய்தீர்

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2

No comments :

Post a Comment